Wednesday, 22 February 2012

எனக்குள் 
ஏற்படும் உணர்வுகளை 
அதாவது 
எண்ணங்களை 
வெளியே சொல்ல நேர்ந்தால்...
அது 
கேட்பவர்க்கோ  
என் பெருமையாகவோ 
அல்லது 
எனக்கே 
அது 
பெருமையாகவே அமைந்து விடுகிறது.. இருப்பினும்,
நான் கூறுவதும்... 
அவர்கள் 
கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது. 
காரணம் 
என்னை விட்டு 
என் பெருமைகள் வெளியே  
செல்வதாக 
என் இறைவன் 
எனக்கறிவித்த 
இன்னொரு எண்ணங்களால்.. 
ஆக 
எண்ணங்களே வாழ்வு
இப்புற வாழ்வை 
நாம் விரும்பும் வரை 
இறை உணர்வுகள் 
அதாவது 
எண்ணங்கள் 
ஏணிப்படியாக வந்து 
நம்மை ஏக்கங்களாக  
எதையாவது கதை எழுதி... 
எழுத்தை விதி என்றும் 
விதியை மறை என்றும் 
நம்மை ஏமாற்றிக்கொள்ளும்.
இந்த விளக்கம் கூட அப்படியே. 
மன்னிக்கவும், 
ஞானம் கிடைக்கும் வரை குழப்பம் தான். 
ஆம் 
ஞானம் என்பதை 
பெறும் பொருளாக கொள்ளும் வரை... 
குழப்பம் இங்கு 
குடும்பமாக,
இலட்சியமாக,
பெருமையாக,
தோல்வியாக,
துரோகமாக 
மாறி மாறி வித்தை காட்டும்.
ஞானம் என்பது நம்மால் 
நாம் உணரக்கூடியது.
உணர்தல் என்பது உண்மை.
உண்மை என்பது இருப்புணர்வு.
இருப்புணர்வு 
நமக்கு அறிவித்தலின் 
முதல் படியே 
நமக்கு வரும் சோகமும் கவலையும் 
என 
இன்ன பிற வியாதிகளும் 
காரணம் ஏதுமின்றி படைத்தலும்,காத்தலும்,அழித்தலும் நிகழாது. 
ஆம் 
எது படைத்தது?
ஏன் படைத்தது?
எதற்காக அழித்தது? 
இதுவே அறிவுடைமை.
நாம் 
இதுவரை அறிந்தது.
மற்றவர் நமக்கு கூறியது 
மற்றவர்களுக்கு இன்ன பிற மற்றவர்கள் கூறியது. ஆக 
இது தகவல் பரிமாற்றமே 
தவிர 
அறிவாகாது. 
அறிவென்பது வெட்ட வெளிதனில் 
இருந்து பெறுவது.
அதாவது உணர்வது. 
இந்த 
உணர்தலுக்கு பெயரே அறிவாகும்.
இந்த இறை அறிவிப்பே ஞானமாகும்.
ஞானம் என்பது பக்தியல்ல. 
பக்தி என்பது 
ஒரு பொருளை பொருளாக விரும்புவது.
அது 
ஒரு போதும் ஞானமாகாது.
இந்த 
தெளிவே யோகம். 
யோகம் என்பது கூட 
நான் இருக்கிறேன்,
என்ற 
இருப்புனர்வை மறந்து 
அதற்கு ஒரு உருவம் கொடுத்து... 
அந்த 
உடம்பை நேசிப்பது. 
நேசித்த, 
இந்த உடம்பை பேணி காப்பதே யோகம்,
அவ்வகை யோகத்தின் 
அடுத்த வகை கர்மம்.
அதாவது 
செல்வம் சேர்ப்பதையும்,
புகழ் அடைவதையுமே... 
கருத்தாக கொண்டு கடமையாற்றுவது. 
ஆக 
பக்தி-யோகம்-கர்மம் இவையனைத்தும் அடிப்படையில்லாத கற்பனையே... 
இந்த தெளிவை,ஞானம் என்ற அடிப்படையில், இதுவும் இறை அறிவிப்பென்றே கொள்ளும்,,.
எண்ணங்களால் பசி என்ற உணர்வை வெளிப்படுத்துவது யார்? 
அது ண்ணமா?
அப்படியானால் அதற்குள் ருசி 
என்ற தேடல் 
என்ன?
அதுவும் கற்பனையான இவ்வுடம்பின் மாயமே. என்றால்...? 
மாய விளிம்பிற்குள் 
ஏனிந்த போராட்டம்?
எதற்கிந்த அவலம்.
ஆக 
ஞானம் என்பது ஒரு கண்ணாடி.
என்ன? நினைக்கிறோம், எதுவாக
ஆசைபடுகிறோமோ?அதுவே அதுவானால்...
அதுவே 
ஞானம் என்பது எப்படி?அறிவுடமையாகும்?
கட்டுப்படுத்த முடியாத காமம். 
கவலைக்குள்ளாகும் கோபம். 
பிரிய முடியாத பாசம்.
மகிழ தவிக்கும் அன்பு. 
வெளிக்காட்ட  துடிக்கும் திறமை.
இப்படி 
இன்ன பிற குணங்களும் 
மனிதனுக்கான சாபங்களா?
அல்லது 
மனிதனே 
இறைவனை உணரும், 
அல்லது 
இறைவனாக...உணரும் 
எண்ணத்தின் கேடா?
யார் கூறி?
எது தெளிய?....
தெளிவென்பது என்ன? 
அமைதியாயிரு.
அதற்கு 
பெயர் பொறுமை. ஆனந்தமாயிரு 
அவன் தந்த கொடை. எதிர்பார்த்திரு. 
அவன் நன்கறிந்தவன்.
பெரும் கருணையாளன்.
மகத்தானவன்.
இரத்த கட்டியில் இருந்து 
மனிதன் படைக்கப்பட்டான்.
என்ற விளக்கத்திற்கு,
முன்.
ஒரு திருடன்- 
திருடன் என்றால் என்ன?
எதனை? 
ஏன் திருடினான்?
எதற்காக?
அவன் திருடன் ஆனான்?
அந்த திருடனின்...
அந்த திருட்டுக்கான சூழல்...
ஏன் விழைந்தது?
இதற்கு யார்?
திரைக்கதை வகுத்தார்கள்?
எதன் அடிப்படையில்?
அந்த நியாயம் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது?   கற்பிக்க பட்ட இவர்கள்,
எப்பொழுது பயின்றார்கள்? 
அல்லது 
அதனை பயிலத்தான் வந்தார்களா? 
அப்படியாயினிந்த, 
பயிற்சிக்கு முன்... 
ஏன்?
இந்த குடும்பம்,
காமம்,பொறாமை,
இலட்சியம்,கனவு?
இது 
வெற்றி பெறக்கூடாதென்றே விதித்த 
சூதாட்ட களவு போல் உள்ள 
இந்த 
வாழ்வை கொண்டாடுவது எப்படி?
கொண்டாடியது யார்? 
கொண்டாடுகிற...
வெற்றி பட்டியல் தான் என்ன? 
எது? உண்மை.
எது?பொய்.
அதாவது 
எது சத்தியம்?
எது தர்மம்?.,
தர்மம் என்றால்....
ஆறறிவு படைத்த மனிதன்...
தனக்கு 
கீழான-அறிவுள்ளவற்றை பார்த்து,
ஏன்,மிரள வேண்டும்?
அல்லது 
அந்த 
உயிரற்ற ஜடத்தின் ருசியை 
ஏன்? விரும்ப வேண்டும்.
மீன் என்ற ருசியை கிட்டத்தட்ட எல்லா  மனிதர்களும்-ஏன்,சைவம் என்பவர்களும்
கடல் புஷ்பம் என்று 
கதை மாற்றி உண்ணும்...,
இந்த 
ருசியை மனிதனுக்கு உண்டாக்கியவன் 
இறைவன் என்றால்?,
நீரில் உள்ள அழுக்கை 
இவன் தின்பதானால்...
இந்த 
கண் கட்டி வித்தைக்கு காரணம் என்ன? 
காரியம் நிகழ்வது ஏன்? 
இதில் 
ஞானம் என்பது 
நிகழ்ந்ததையும், 
நிகழப்போவதையும்...
பேசுவதிலும், 
சிந்திப்பதிலும்,
தர்கிப்பதிலும்,
ஆராய்வதிலிலும்.... 
நிகழ்காலம் சூறையாடப்படும் பொழுது. 
அக்கனமாயிரு,
நிகழ்காலத்தில் 
வேறு எந்த சிந்தனையும் 
இல்லாதிரு. கவனமாயிரு.
அமைதியாயிரு.
ஆத்மசொருபமாயிறு.
எனில்.
ஏன்? இத்தனை இயற்க்கை அழகு?
இத்தனை மலர்கள்?
மலர்களில்...இத்தனை நறுமணங்கள்? 
காற்றுகள்,
இதமாக சிலிர்க்க வைக்கும் 
மழைதூரல்கள்....
என,இந்த 
இத்யாதிகளில்....
என்னை இழக்கவே நேரிடுகிறது.
இதில் 
மற்றொரு குழப்பம்.
இவையனைத்தும் மாயை,
இதற்கப்பால்,
இந்த உலகம் உண்டென்றும்...,
அங்கே
ஒரு சுவர்க்கம் என்றும்... 
அந்த
சுகத்திற்க்காக,
இங்கே 
தர்ம-நியாயப்படி,
வாழ வேண்டும்.
என்றும், 
அதாவது...
எனக்கொரு,
ஆசை எழுந்தால் கூட 
இவர்களின் தர்மப்படி 
அதனை மறந்து.... 
அதாவது  
மனசாட்சியை மறுத்து,
போலியாக-போலித்தனமாக...
வாழ வேண்டும்.
காரணம்,
பார்க்காத ஒன்றை-நம்பிக்கை கொண்டு.
அப்படியாயின் பார்க்க முடியாத மனம்,
அதாவது 
எண்ணங்கள் தானே...
மறுமையையும் அறிவிக்கின்றன.
இத்தனை குழப்பத்திற்கும்,
நடுவில் தானா?ஞானம். அல்லது 
ஞானம் தான் உட்சமா?
அல்லது 
ஞானம் என்பது,பிறரை அடிமை செய்து 
ஏளனம் செய்யும் ஒரு வித அற்ப முயற்சியா? விளங்குவதற்கு தானே விளக்கம் தேவை.
விளங்கவே முடியாத விளக்கத்தை, 
யார் விளக்க முடியும்? 
அப்படி விளக்குபவர்களுக்கு, 
எங்கனம்?விளக்கம் ஏற்ப்பட்டது? 
யார் ஏற்படுத்தியது?
அப்படியாயின்....
மற்றவர்களும் வேறு படைப்பினரா?
இறை என்ற ஒன்றில்லாமல்,
இந்த இயக்கம் இல்லை.,
ஆனால் 
இரை என்ற ஒன்றில்லாமல்...
எந்த ஜீவன்களும் இல்லை.
என்றிருக்க, 
இந்த இரையை படைத்தது,இறை என்றால்... 
தின்று உறங்கி...,
தின்று உறங்கி,
தினவில்-மயங்கி,வென்று. 
பெற்று,
பெற்று-கெட்டு,
கெட்டு- தவறி,
தவறி-மாண்டு....
ஏன்?
இப்படி ஒரு இயக்கம்?
இந்த 
உலக இயக்கம் தற்காக?
இப்படி 
இயங்குவது ஒரு இயக்கமா? 
அவ்வியக்க சுழற்சிக்கு ஒரு தலைவனா? 
அறிய முடிய,அல்லாத ஒன்றை-பரம்பொருளுக்காகவும்,
விளக்க முடியாத இயக்கத்தை, 
உலக வாழ்க்கை என்றும் 
கண்முன்னே வியாபித்திருக்கும் இவ்வியக்கத்திற்கும்,
இத்திருவியற்கையை...
மாயை என்றும்,
ஏனிந்த குழப்பம்?
தர்க்கான தேடல்?
இயற்கையே தீர்மானி...
என்னை தீர்மானி.?!.... 
nm கமல்ராஜ்.
ec go. 

Monday, 20 February 2012

தோணுவதும் பின் தோன்றுவதும் மாயை.
மாயை என்றுணர்ந்து 
அதில் 
மயங்குவது குற்றம். 
அதாவது 
பாவம்.
பாவத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்பது,
இன்னொரு பாவம்.
பாவத்தை உணர்ந்து 
வருந்துவது பிரார்த்தனை.
பிரார்த்தனை என்பது எழும் எண்ணங்களை நம்புவது.
நம்பிய எண்ணங்களுக்காக பொறுமை காப்பது.
பொறுமை என்பது உணர்வது.
ஒவ்வொரு 
கனத்திலும்,கனத்தை கவனிப்பது. 
அதாவது 
விடும் மூச்சை இழுத்தும்,
இழக்கும் மூச்சை இழுத்தும் 
என  
இவ்வியக்க தகும் இயக்கத்தை உணர்தல். உணராமல் இருந்த பல கனங்களுக்கு, 
அதாவது 
பாவங்களுக்கு, வருந்துவது.
வருந்துவது என்பதின் 
உட்கருத்து 
பொருளின் அடிப்படையில் 
பொருளை இழந்து,
அப்பொருளுக்குரிய 
தரத்தை நினைத்தோ 
சிந்தித்தோ வருந்துவதல்ல.
பிழை பொறுத்தல்.
அதாவது 
நம்முள்ளே இருந்து,நம்மை ஆட்சி செய்து 
நல்லருள் புரிந்து... 
நம்மை ஆண்டவன். 
அதாவது 
நம்மால் 
நம் அறிவாள்,அறிய முடியாத 
அந்த ஆண்டவன்,
நாம் செய்த பிழை அனைத்தும் பொருத்து... 
நமக்கின்னும் சுகமளித்து-சுகப்பாதையில் 
இப்பவும் திரும்பச்செய்து... 
நம் கருணையாளனின் இருப்பிடமான 
நம் மனதையும் கருணை வடிவமாக கொண்டு 
பிறர் செய்யும் பிழைகளை 
பொறுத்து சகித்து, 
பிறகு அதற்காகவும் வருந்துவது. 
ஆக,தோணுவதை-
செய்யாதது குற்றம்.
தோணாததை 
செய்வது குற்றம். 
நாம் செய்கிறோம் என்ற நினைப்பு ஒரு குற்றம்.
நினைவு என்பது மற்றொரு குற்றம்.
குற்றம் என குறை கூறுவதும் குற்றம்.குற்றமாக கருதி குறைபடுவதும் குற்றம்.காரணம்,குற்றம் என்பது நிகழ்ந்து விட்ட ஒன்று.
நிகழப்போகும் மற்றொரு குற்றத்திற்கான விழிப்புணர்வு வருந்துவதல்ல.
அதாவது கவனம்,
அதை பெற இறைவனிடம் உள்ளுணர்வு வழியாக பொறுமை கற்பதே முயற்சி.
ஆக 
குற்றம் குறை கூறுவது குற்றம்.
பொறுமை கற்பதே நமது வாழ்வின் அடிப்படை!
அதாவது 
வேகத்தின் அடிப்படையில் நம் அறிவு கூறும் பொருமையல்ல.
நல்லறிவாளர்களுக்கு 
பொறுமை என்பதொரு வரம்.
அது 
காத்திருக்க காத்திருக்க 
காரிருள் விடிவதை காணும் பாக்கியம்.
என்னை நீங்கள் காண முடியும்.
அறிய முடியாது.
அது போலவே 
உங்களை 
நான் காண முடியும் 
அறிய முடியாது.
ஆனால் 
நம்மை நம்மால் உணர்ந்தறியும் பாக்கியம்.
இந்த 
பொறுமையின் இறை கருணையால்...  
நாம் பெறுவது பாக்கியமாகும். 
ஆம்.நாம் எழுத முயலும் முன் 
நமக்கு எண்ணங்கள் தந்து,அவ்வெண்ணங்களை 
ஓசையாக்கி...அதனை,
ஒரு மொழியாக்கி.... என,இத்தனை பாக்கியமிக்க,
மொழியின் அர்த்தங்களை உணராமல்,
வெறும் எழுத்தை எழுதுவோமேயானால்...
அது,வெற்று காகிதத்தை அழுக்காகும் முயற்சி. 
இறை உணர்வுடன் நாம் எழுதுகிறோமா...? யாருக்காக எழுதுகிறோம்...? 
ஏன்?எழுத வேண்டும்?
நான் எழுத,எது தூண்டியது?
அப்படியாயின்...
அது மற்றவர்களுக்கும் ஏற்புடையது தானே. அப்பணி இறைபணி. 
நம் கடமை 
இறைதன்மை பேணிக்காப்பதேயாகும்.
ஆக,உள்ளுணர்வு வழியாக ஊற்றெடுக்கும் நமது சிந்தனையை அடைகாப்பதே.
நம் ஞானக்குஞ்சு 
வளம் பெற சிறக்கும்.
நம் முயற்சி என்பது மற்றொரு இயக்கத்தின் அடிப்படையில். அப்படி இருக்க,
முயற்சிக்கு வெற்றி என்பது,
நிலவில்லாத வானத்தில் அதாவது அமாவாசையில் நிலவில்லை என்று கூறுவது போல். 
நமக்கில்லை.அதாவது, 
அமாவாசையில் நிலவை காணும் 
சக்தி நமக்கில்லை. 
அது போலவே முயற்சி என்பதும்,
முயற்ச்சிக்கு வெற்றி என்பதும், 
வெற்றியின் எதிர்நிலை தோல்வி என்பதும், தோல்வியால் வருத்தமும் பின் விரக்தியும்...
ஆக,நம் மனம்.
அதாவது,இறை இருப்பிடமான 
அக்கருவூலத்தில்  குப்பைகளை,அதாவது 
மாயைத்தனமான மடமை அழுக்குகளால் 
வேண்டாதவைகள் எல்லாம்,வேண்டும் என்ற 
பிற்போக்குதனமே முயற்சி என்பது.
அதாவது 
பிறர் இதை படிக்க நேர்ந்தால்...
அது கூட இதனடிப்படையே, 
இது என்னுள்ளே எனக்கறிவிக்கும் 
என் இறைவனின் வார்த்தைகளை 
அதாவது சத்தியத்தை 
கற்றுக்கொள்வதற்காக... 
நான் செய்யும் ஒரு முயற்சி 
இதுவும் 
பிற்போக்குத்தனமானவைகளில் முதலாவது தான்.
ஆக,அதாவது 
நாம் வாழ நமக்கு தேவையான முதல்- மூச்சு காற்று,பின் நீர் 
உணவு.இவ்வளவே அடிப்படை.
அதன் பின் நமக்கேற்படும் தினவும்,தினவிற்கு பல ரசனைகளும், 
ரசனைக்கேற்ப நறுமணங்களும்,
சிலிர்க்க வைக்கும் நீரோடை,மெல்லிய காற்று 
என அனைத்தும்,நம் எந்த முயற்சியுமின்றி 
எப்பொழுதும் நமக்காக, 
நம்மருகே வேண்டாவிடினும்.
அப்படியிருக்க,நாம் முயற்சி செய்வது எதற்காக?
என்ற முதல் கேள்வியே... 
இறைவன் நமது பிழை பொறுத்தளினால் 
வந்த கொடையாகும்.
அதாவது 
இப்பொழுது நமக்கிருக்கும் இச்சிந்தனை கேள்வி, 
இருப்பதை அனுபவிப்பதே சுகமாகும்.
அப்படியிருக்க அனுபவிப்பதற்காக..
இருப்பதை தொலைப்பது எவ்வாறு சுகமாகும்?
சுகம் என்ற சத்தியத்திற்கு 
நாம் 
கொண்ட பொருளே தவறு.
அதாவது மாயமான மடமைகளில் 
சிக்கி உழன்ற காரணத்தால் 
நம் அறிவு நமக்கு கூறும் 
சுகம் என்பது,மற்றவரை பழிப்பது.அதாவது கௌரவம் என்ற அடிப்படையில். 
மற்றவர்களை தாழ்த்துவது,
பொறாமை என்ற அடிப்படையில். 
திர்ப்பது,திறமை என்ற அடிப்படையில். 
மற்றவர்களை அழிப்பது,பாதுகாப்பு என்ற அடிப்படையில். ஆக இந்த அடிப்படையனைத்தும் மாயை என்பதே இதன் பொருள். 
அதாவது அடிப்படை இல்லாதது மாயை.
அடிப்படை அறிய முடியாதது இறை.ஆக,
பசி என்பதும் ருசி என்பதும் 
நமக்காக,நம் இறைவன்  
நமக்களித்த பாக்கியங்களான
நமது சந்தோஷ சுகங்களின்...
அடிப்படை நம்பிக்கை இந்த பசியும்,ருசியும்.ஆக 
இப்பசியும் ருசியுமே...
இவ்வியக்கத்தின் வித்தாகும்.
இவ்வியக்கத்தகும் வித்தை,நமக்கு விருப்பமக்குவது நமதெண்ணங்கள்.நமதெண்ணம் என்பது 
பசியாகவும்,ருசியாகவும்,பின் அலங்காரமாகவும்,
நாகரீகமாகவும் நம்மை பண்படுத்தவே,
அதை விடுத்து நம் முயற்சி என்ற போர்வையில் 
நாம் முயல்வதென்பதோ,இவ்வியற்க்கைக்கு எதிரானது.அதாவது சேமித்தல்.
நாளை என்ற நம்பிக்கையின் மீது 
அதாவது எண்ணங்களால் நம்மை ஆட்சி செய்யும் 
நம் இறைவனை நம்பாமல்...
இவ்வியற்கையில் வேறெந்த 
உயிரினங்களும் செய்யாத...
செய்யப்படாத அருவருக்கத்தக்க செயல் அதாவது சேமிப்பு.ஆக,த்தியத்தின் பாதை தவறாக மாறும் பொழுது,அதாவது 

மாற்றப்படும் பொழுது மாயையின் ஆட்சி 
நம் எண்ணங்களை குழப்ப எதிர்படுகிறது. அதாவது
நாம் என்ற நாம்... 
நானாக,மாறுவதன் முதல் முயற்சியே சேமிப்பு. 
நாளை நமக்கானது என்பதை விடுத்து நாளை எனக்கு மட்டும், 
என்ற குறுகிய மனப்பான்மை அதாவது,கருணை வடிவமான,அந்த காணமுடியா 
மனதில் இருக்கும் அருட்கொடையாளனின் 
தன்மை குறைந்து நான் வெறுமனே 
நானாக மாறி,நானாக முயற்சி செய்கிறேன்.
வரப்போகும் பசிக்காக நான்,இன்று உழைக்கிறேன். அப்படி உழைக்கும் பொழுது 
உணரவேண்டிய ருசியை மறந்து உழைக்கிறேன்.
வந்த பசியை மதிக்காமல் உழைக்கிறேன்.
இப்படி 
முயற்சி என்ற கௌரவம், அடிப்படை இல்லாத பிற்போக்குத்தனமான நம்பிக்கையின் மீது அவநம்பிக்கை கொண்டு அர்த்த மற்ற தத்துவத்தை..
தரித்திரத்தை... சாத்தியமாக்கி அதனுள்ளே 
ஏமாந்துகொண்டிருப்பது,
மன்னிப்பே இல்லாத பாவம்.ஆக,பிழை என்பது ஒன்றே. அது முயற்சி.இதுவே மாயை. 
இது,ஒழிய அனைத்து பாவமும் நீங்கும். 
முயற்சி என்பது அனைத்து பாவத்தையும் உள்ளடக்கியது.நான் சம்பாதிக்கிறேன்.என் பணம் 
அதாவது,என் சொத்து.எனக்கு பல அடிமைகள் தேவைபடுகிறார்கள்.எனது அன்றாட பணியில் இருந்து,என் உடலின் அனைத்து 
உவமானங்களுக்கென பல அடிமைகள். அடிமைகளின் பெயர் 
காதல்-காமம்-வெற்றி-தோல்வி-துரோகம்-குரோதம்-பழி-பொய்-கொலை-பேராசை.இப்படி இந்த அடிமைகளை,நமக்கு,நாம் பெறுவது நம் முயற்சியில்.பின் அந்த அடிமைகளின் அடிமையாய்  
நாம் மாறுவது என்ற,நன்றி கெட்டத்தனத்தின் காரணமாக நன்னடத்தை இழந்து,
இழந்ததும் தெரியாமல்... புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்செயல்களை மன்னித்தும் 
நமக்கு வாழ எல்லாவிதமான சௌகரியங்களுக்கும் 
குறைவில்லாமல்...இன்னமும் நம்மை 
மன்னித்தருளும் 
இறைவனின் கருணையை என்னவென்று சொல்வது.
ஆக,நம் பாவம் உணர்ந்து 
பிறகு விட வேண்டியது,
நம் முயற்சி என்ற மாயை. 
பின் நமக்கிருக்கும் பாக்கியங்களுக்காக  
நாம் பிரார்த்திப்பது.
பிரார்த்தனை என்பது வேண்டுவன அல்ல !தியானிப்பது அல்ல ஏன்? அது ஒரு செயலே அல்ல.பிரார்த்தனை என்பது நிலைத்திருப்பது.
ஒன்றியிருப்பது.சார்ந்திருப்பது.
எதனோடு? யாரோடு?என்ற கேள்விகள் 
எழாத பதிலோடு. 
நாம் அறிந்து கொள்வது அறிவாள் தான் யாரும் மறுக்க முடியாது.காரணம் நேற்று நம்முடைய அனுபவமே,இன்று நம்முடைய அறிவாகப்படுகிறது.
அறிதல் என்பது அறிந்து கொண்டேயிருக்கும் 
ஒரு அற்புத சக்தி.
அறிந்து கொண்டிருக்கும் இயக்கம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருத்தல் அறிவாகும்.
இதில் அனுபவம் என்பது நமது அறிவாள்.அதாவது 
கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியே.  
அதாவது பாவச்செயலாகும்.காரணம் அனுபவம் என்பது அறிதலை அடிப்படையாக கொண்ட எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது.வேறுபாடானது. 
மாறுபட்டது.ஏன்,அனுபவம் பிறருக்கு அறிவுரையாக 
மாறும் பொழுது என் கவனம்,அதாவது என் அறிதல்
என்ற இயக்கம் முதலில் தடைபடுகிறது,
இரண்டாவது கேட்பவருக்கும் தடைபடுவதோடு 
ஒரு ஏக்கம் அதனால் அது பணிவோ,கருத்து வேறுபாடோ,எதுவோ என்றறியாமலே... 
அறிவுருத்தியவனுக்கு ஒரு பெருமையாகவோ அல்லது கர்வமாகவோ... 
இப்படி இத்தியாதிகளில்...
எதுவாக  வேண்டுமானாலும் இருக்கட்டும் கவனம் மாறுவது,
நம்மை படைத்த 
நம் இயற்கைக்கு அதாவது அந்த மாபெரும்  கருணையாளனுக்கு, நாம் எதிர்பட்டவர்களாகிறோம்.
இதை எஜமான் தொழிலாளி 
என்று வர்க்கப்படுத்தி பேதமை கொண்டலும்,படைப்பாளன் என்று பகுத்தறிவானாலும்,தந்தை-மகன் என 
அர்த்தம் கொண்டாலும்,
கொண்டிருக்கப்பட்டு கொண்டிருக்கும் 
இப்படி எல்லா சூழலிலும்,நம் கவனம் அதாவது 
நம்முடைய அந்த மாபெரும் அறிவு 
வீணடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.அதாவது 
அறிதல் என்ற இயக்கம் ஏன்? எதற்கு? என்று தெரியாத சூழலில்,நாம் தெரிந்து அர்த்தப்படுத்தி கொண்டிருக்கிற நம் குறிக்கோள்கள் அதாவது
முதலில் சுதந்திரம் என்றெடுத்து கொள்வோமேயானால்...சுதந்திரம் என்பது 
நம் அனுபவ அறிவு அதாவது மற்றவர் கூறி கேட்டு 
அல்லது 
அந்த 
மற்றவர்களுக்கு மற்ற 
மற்றவர்கள் கூற
கேட்ட மட்டமான அர்த்தங்களில் 
சுதந்திரம் என்பது சர்வாதிகாரத்தில் இருந்து வெளியாகும் ஒரு விடுதலை உணர்வு. 
அதாவது யாரும் நம்மை கட்டுப்படுத்தாத 
ஒரு சுதந்திர நிலை எதனையும்..யாருக்காகவும் 
பயந்தோ,கவலை கொண்டோ,விரும்பியோ, 
வெறுத்தோ,இல்லாத ஒரு பரிபூரண நிலை. 
அதாவது விடுதலை அதாவது சுதந்திரம்.
அப்படி கிடைக்க பெற்ற சுதந்திரத்தோடு திரியும் 
ஒரு மனிதனை பார்த்து நாம் கூறும் 
முதல் வார்த்தை சர்வாதிகாரி.இதில் சுதந்திரம்-விடுதலை 
என்ற அர்த்தத்திற்கு எவ்வாறு? அர்த்தம் கொள்ள முடியும்.இப்படி முரண்பட்ட பல விசயங்களில், மற்றொன்று.
ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் இரண்டு.
இது பள்ளிக்கணக்கு.இதில் உள்ள முரண் 
இரண்டு-வேறு கருத்துள்ள இருவர் சேர்ந்தால் 
இருவரும் ஒன்றாகி விட்டனர். 
என்போம். அல்லது ஒரு மரத்துண்டை அதாவது 
ஒன்றாய் இருக்கும் ஒரு,மரத்துண்டை வெட்டினால் 
அதாவது கழித்தால் இரண்டாகும். இதில் உள்ள உண்மை புரிந்தாலும்,மனதின் அடிப்படையில் சரி.
ஆயினும் எண்ணிக்கையின் அடிப்படையில் 
பிரித்து பார்க்கும் போது சரியாகுமா?
என்பது நம்முடைய மற்றொரு கேள்வியாகும்.
ஒன்றாயிருந்து ஒன்றாய் உணர்ந்து வெவ்வேறாய் கண்டு,வெவ்வேறாய் உணர்ந்து,வெவ்வேறாக பட்டு 
வெவ்வேறு நிலையில் வெவ்வேறுவகையில் 
இருப்பதனால்...,இந்த முரண். 
முதலில்,இதை களைவோம் 
அதை களைவோம் 
தை மற்றவர்களுக்கு தெரிவிப்போம்.அல்லது 
புரிய வைப்போம்.என்ற எல்லாமும் அறிவீனமே.
இக்கனமே கவனமாயிருத்தல்
தவிர,அதாவது அறிதல் இயக்கத்தில் இயங்கி, இயக்கமாகி,இணங்குவதே.
பிரார்த்தனை.சரணாகதி. இப்படி எல்லாம்... 
எல்லாமும்..... எல்லாமுமாய்.
                                       -look@me/nmkamalg